Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

13 வயசுல பாலியல் சீண்டல் செய்தவனுக்கு யாஷிகா கொடுத்த தண்டனை… அவரே பகிர்ந்த தகவல்!

13 வயசுல பாலியல் சீண்டல் செய்தவனுக்கு யாஷிகா கொடுத்த தண்டனை… அவரே பகிர்ந்த தகவல்!
, செவ்வாய், 2 ஜனவரி 2024 (07:09 IST)
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸோம்பி, கவலை வேண்டாம் என தான் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த். சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்து ஆறு மாத சிகிச்சைக்குப் பின் குணமாகி மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

எஸ் ஜே சூர்யாவோடு அவர் நடித்திருந்த கடமையை செய் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது. தமிழ் சினிமாவின் தற்போதைய கவர்ச்சி பதுமையாக இருந்து வரும் அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படவாய்ப்புகள் இல்லை. ஆனாலும் சமூகவலைதளங்களிலும் அவர் வரிசையாக கவர்ச்சி புகைப்படங்களாக பதிவேற்றி வந்தார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்துள்ள ஒரு நேர்காணலில் 13 வயதில் தான் சந்தித்த பாலியல் தொல்லை பற்றி பேசியுள்ளார். அதில் “நான் சந்தானத்துடன் இனிமே இப்படிதான் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தேன். அப்போது எனக்கு 13 வயது. அந்த ஷூட்டிங்கின் போது பொது இடத்தில் ஒரு ஆள் என்னை தவறாக தொட்டான். அந்த வயதிலேயே அது எனக்கு கோபத்தை உண்டாக்கியது. அவனை எட்டி உதைத்துவிட்டேன். அவனால் என்னை ஏன் உதைத்தாய் எனக் கேட்க கூட முடியவில்லை. பெண்களுக்கு எப்போதுமே தைரியம்தான் முக்கியம்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சலார் 10 நாள் கலெக்‌ஷன் இவ்வளவுதானா? அப்ப 1000 கோடி கஷ்டம்தான்!