Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணிகர்னிகா இரண்டாம் பாகம் அறிவிப்பு – எழுத்தாளர் புகார்!

மணிகர்னிகா இரண்டாம் பாகம் அறிவிப்பு – எழுத்தாளர் புகார்!
, சனி, 16 ஜனவரி 2021 (11:04 IST)
மணிகர்னிகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பால் அந்த படத்தின் எழுத்தாளர் புகார் ஒன்றை எழுப்பியுள்ளார்.

ஆங்கிலேயர்களை துணிச்சலாக எதிர்த்து போராடிய ஜான்சிராணி லட்சுமிபாயின் வாழ்க்கை ‘மணிகர்னிகா’ என்ற பெயரில் இந்தியில் திரைப்படமாக கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. இதில் ராணி லட்சுமிபாய் வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்திருந்தார். இப்படத்தை கிரிஷ் இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகை கங்கனா ரனாவத் அறிவித்துள்ளார். இரண்டாவது பாகத்துக்கு 'மணிகார்னிகா ரிட்டர்ன்ஸ்: தி லெஜண்ட் ஆஃப் திட்டா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை கங்கனாவே முதல் பாகத்தைத் தயாரித்த கமல் ஜெயினுடன் இணைந்து தயாரிக்கிறார்.

இதையடுத்து இந்த படத்தின் மீது எழுத்தாளர் ஒருவர் புகார் எழுப்பியுள்ளார். 'திட்டா-காஷ்மீரி கி யோதா ராணி' என்கிற புத்தகத்தின் ஆசிரியர் ஆஷிஷ் கவுல் என்பவர் கதை உரிமையை கங்கணா மீறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபாஸ் நடிப்பில் கேஜிஎப் இயக்குனர் படத்தின் பூஜை!