Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் தொடங்குகிறதா ராணா… கே எஸ் ரவிக்குமாரிடம் கதைகேட்ட ரஜினி!

மீண்டும் தொடங்குகிறதா ராணா… கே எஸ் ரவிக்குமாரிடம் கதைகேட்ட ரஜினி!
, புதன், 23 செப்டம்பர் 2020 (12:07 IST)
ரஜினி நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாக இருந்த ராணா திரைப்படம் மீண்டும் உருவாக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான கே எஸ் ரவிக்குமார் 2011 ஆம் ஆண்டு ரஜினியை வைத்து ராணா என்ற படத்தை இயக்க இருந்தார். படத்துக்கான பூஜை போடப்பட்டு ஒரு நாள் சூட்டிங் நடந்த நிலையில் ரஜினிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் அப்படம் கைவிடப்பட்டது.

அதையடுத்து அவர் ரஜினியை வைத்து லிங்கா படத்தை இயக்க அது படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்னர் மீண்டும் ராணா படத்தின் கதையை சொல்லுமாறு கே எஸ் ரவிக்குமாரிடம் கூறினாராம். மேலும் இப்போது அந்த படத்தை செய்ய முடியுமா என்றும் கேட்டுள்ளாராம். கே எஸ் ரவிக்குமார் முடியும் என உறுதியளித்துள்ளாராம். அதனால் ராணா படம் மீண்டும் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிம்மில் உடலை உருக்கி எடுக்கும் சமந்தா - வேற லெவல் ஒர்க் அவுட்!