Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூகவலைதளத்துக்கு வருகிறாரா அஜித் ? இணையத்தில் பரவும் கடிதம் உண்மையா ?

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (10:34 IST)
நடிகர் அஜித்குமார் சமூகவலைதளங்களில் மீண்டும் இணையப்போவதாக உலாவும் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஜித் எந்த விதமான சமூகவலைதள ஊடகங்களிலும் இல்லை. இந்நிலையில் தனது தரப்பு கருத்துகள் எல்லாவற்றையும் தனது மக்கள் தொடர்பு அலுவலர் சுரேஷ் சந்திரா மூலமாகவே வெளியிட்டு வந்தார். டுவிட்டர் நிர்வாகமே அவரை டிவிட்டரில் இணைய அழைப்பு விடுத்தும் அவர் அதற்கு செவி சாய்க்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் இப்போது ஒரு கடிதம் அதிகமாக பகிரப்பட்டது. அதில் ’நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களை பல முறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், தற்போது மீண்டும் சமூகவலைதளங்களில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.

அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய உத்தியோகப்பூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதன் மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதனை காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் எந்தவித தவறான செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்’ என அந்த கடிதத்தில் இருக்க, அது உண்மையா என ரசிகர்கள் குழம்பினர். ஆனால் அந்த கடிதம் உண்மையானது இல்லை என அஜித் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments