Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றியது ஏன்? நெட்டிசன்கள் அதிருப்தி

யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றியது ஏன்? நெட்டிசன்கள் அதிருப்தி
, திங்கள், 16 ஜூலை 2018 (07:37 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் யாஷிகாதான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் யாஷிகாவுக்குத்தான் வாக்குகள் குறைவாக பதிவு செய்யப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்தன. ஆனால் அனைவரும் எதிர்பாராத நிகழ்வு நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்தது. நித்யா வெளியேற்றப்பட்டார்.
 
யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றியது ஏன்? என்பதே தற்போது நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது. கவர்ச்சியான உடையில் வலம் வரும் யாஷிகா இன்னும் சில நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தால் பார்வையாளர்களின் கவனத்தை பெறலாம் என்ற கணிப்பா? என்று தெரியவில்லை. 
 
webdunia
நித்யா ஆரம்பத்தில் வெறுப்பை சம்பாதித்தாலும் கடந்த சில நாட்களாக அவரிடத்தில் எந்த தவறும் காணப்படவில்லை. நேர்மாறாக மகத், யாஷிகா இருவரும் கடும் வெறுப்பை ஏற்படுத்தி வந்தனர். இருந்தாலும் மகத் பெயர் எவிக்சன் பட்டியலில் இல்லாததால் ஓட்டு போட்டுபவர்கள் யாஷிகா மீது தங்கள் கோபத்தை வாக்குகள் மூலம் காண்பித்தனர். ஆனால் வாக்குகளையும் மீறி யாஷிகா காப்பாற்றப்பட்டுள்ளார். இதற்கு ஏன் வாக்குப்பதிவு? ஒவ்வொரு வாரமும் பிக்பாஸே ஒருவரை தேர்வு செய்து எவிக்சன் செய்யலாமே? என்பதுதான் தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி.ராஜேந்தருக்கு நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி