Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னி நதி பாடல் வெளியீட்டில் கலந்துகொள்ளாத விக்ரம்… தொடரும் சர்ச்சை!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (11:00 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டில் விக்ரம் கலந்து கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த நிகழ்வில் கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் ஆகியோர் மட்டுமே கலந்துகொண்டனர். இந்நிலையில் இந்த நிகழ்வில் படத்தின் நாயகர்களில் ஒருவரான விக்ரம் கலந்துகொள்ளாதது ஏன் என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஏற்கனவே பொன்னியின் செல்வன் படக்குழு மேல் விக்ரம் அதிருப்தியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments