Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரமின் ’கோப்ரா’ தாமதமாவது ஏன்? புதிய தகவல்

விக்ரமின் ’கோப்ரா’ தாமதமாவது ஏன்? புதிய தகவல்
, திங்கள், 20 ஜனவரி 2020 (14:13 IST)
நடிகர் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ’கோப்ரா’ என்ற படத்தின் படப்பிடிப்பு ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு விக்ரம் செல்வதற்கு முன்னரே முடிக்கப்படும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போதைய தகவலின்படி இந்த படம் கால தாமதமாகி கொண்டே வருகிறது
 
இந்த படத்தில் விக்ரம் 15க்கும் மேற்பட்ட கேரக்டர்களில் நடித்து வருவதால் ஒவ்வொரு கேரக்டருக்கும் காலதாமதம் ஆவதால் இந்த படம் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தவில்லை என கூறப்படுகிறது. எனவே ‘பொன்னின் செல்வன் படத்துக்கு விக்ரம் செல்வதற்கு முன்னரே ’கோப்ரா’  முடிவடைய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் அடுத்த மாதம் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்காக விக்ரம் தாய்லாந்து செல்ல உள்ளார். அவர் பிப்ரவரி இறுதியில்தான் சென்னை திரும்புவார் என்றும் அதன் பின்னர் மார்ச் முதல் வாரத்தில் தான் ’கோப்ரா’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைத்து வரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ஏற்கனவே இந்த படத்திற்கான அனைத்து பாடல்களையும் கம்போஸ் செய்து முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தற்காப்பு கலை என் நிஜ வாழ்க்கையில் தைரியத்தை கொடுத்தது!