Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடிவாசல் தள்ளிப் போனதின் காரணம் என்ன?.. வெளியான தகவல்!

vinoth
வெள்ளி, 27 ஜூன் 2025 (11:04 IST)
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலோடு காத்திருக்கும் படங்களில் ஒன்று சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணையும் ‘வாடிவாசல்’ திரைப்படம். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டும் வெற்றிமாறன் மற்றும் சூர்யா ஆகியோரின் அடுத்தடுத்த பட வேலைகளால் இந்த படம் தாமதமாகிக் கொண்டே வந்தது.

இந்நிலையில் தற்போது வாடிவாசல் திரைப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சூர்யா வெங்கி அட்லூரி படத்திலும், வெற்றிமாறன் சிம்பு நடிக்கும் படத்திலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாடிவாசல் திரைப்படம் தள்ளிப்போக (அல்லது கிடப்பில் போடப்பட) என்ன காரணம் என்பதுதான் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வி.

இது சம்மந்தமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை வெற்றிமாறனிடம் 50 சதவீதக் கதைதான் நிறைவடைந்துள்ளதாம். ஆனால் சூர்யா முழுக் கதையையும் முடித்த பின்னர்தான் ஷூட்டிங் என்று சொல்லிவிட்டாராம். இதனால் வெற்றிமாறன் நான் கதையை முடித்துவிட்டு சொல்கிறேன் என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இப்போதைக்கு வாடிவாசல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும் கைவிடப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலக நாயகனுக்குக் கௌரவம்... ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு அழைப்பு!

வருகிறது பிச்சைக்காரன் மூன்றாம் பாகம்… அப்டேட் கொடுத்த விஜய் ஆண்டனி!

பழம்பெரும் நடிகர் ஜி சீனிவாசன் காலமானார்!

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments