Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக நாயகனுக்குக் கௌரவம்... ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு அழைப்பு!

vinoth
வெள்ளி, 27 ஜூன் 2025 (09:29 IST)
தமிழ் சினிமாவுக்கு அளப்பரிய பங்களிப்பை செய்த கலைஞர்களில் ஒருவர் கமல்ஹாசன். நடிகராக மட்டும் இல்லாமல் கதை, திரைக்கதை, நடனம், பாடல்கள், இயக்கம் என பல தளங்களில் கமல்ஹாசன் பங்காற்றியுள்ளார்.  சினிமா உலகில் புதிதாக எந்த தொழில்நுட்பம் வந்தாலும் அதை முதலில் பரீட்சித்து பார்ப்பவராகக் கமல்ஹாசன் இருந்துள்ளார்.

அவரின் பல பரிசோதனை முயற்சிகள் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாகத் தோல்வியடைந்துள்ளன. ஆனால் காலம் கடந்து அவை இன்று கொண்டாடப்பட்டு வருகின்றன. கமல்ஹாசன் ரசிகர்கள் அடிக்கடி சொல்வது ஒன்று ‘கமல் அமெரிக்காவில் பிறந்திருந்தால் இந்நேரம் ஆஸ்கர் விருதை வென்றிருப்பார்’ என்பது.

இப்போது அப்படி ஒரு கௌரவம் கமல்ஹாசனுக்குக் கிடைத்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவுக்குக் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் திரைத்துறைக்குப் பங்காற்றிய கலைஞர்கள் 500 பேருக்கும் மேல் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவில் இருந்து ஆயுஷ்மான் குர்ரானாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்குக் கமல்ஹாசனுக்கு அழைப்பு!

வருகிறது பிச்சைக்காரன் மூன்றாம் பாகம்… அப்டேட் கொடுத்த விஜய் ஆண்டனி!

பழம்பெரும் நடிகர் ஜி சீனிவாசன் காலமானார்!

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments