Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்தை சுசீந்திரன் சந்தித்தது ஏன்?

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (11:54 IST)
இயக்குநர் சுசீந்திரன், விஜயகாந்தை சந்தித்ததற்கான விடை கிடைத்துள்ளது.


 

 

சுசீந்திரன் இயக்கத்தில் ரிலீஸுக்குத் தயாராக உள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சுந்தீப் கிஷண், விக்ராந்த், மெஹ்ரீன், சூரி, ஹரீஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், விஜய்யின் ‘மெர்சல்’ நிறைய தியேட்டர்களில் ரிலீஸாவதால், இந்தப் படத்துக்குப் போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. எனவே, ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தை சந்தித்துள்ளார் சுசீந்திரன். காரணம், இதே தலைப்பில் ஏற்கெனவே ஒரு படத்தில் நடித்திருக்கிறார் விஜயகாந்த். அதனால், விஜயகாந்திடம் வாழ்த்து பெறச் சென்றாராம் சுசீந்திரன். இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், சமூக விஷயங்களை எமோஷனலாகச் சொல்லியிருக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments