Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருத்தப் படாத வாலிபர் சங்கம் பார்ட் 2 வேணாம் என சொல்லும் சிவகார்த்திகேயன்! ஏன் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (15:16 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் வேண்டாம் என கூறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயனின் சந்தை மதிப்பை நிலைநாட்டிய படங்களில் வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்துக்கு முதன்மையான இடம் உண்டு. அதன் பின்னர் அவரை வைத்து ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய படங்களை இயக்கினார். இப்போது எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் தனது முதல் படமான  ஹரிகுமார் நடித்த திருத்தம் என்ற படத்தில் நிகழ்ந்த தவறு பற்றி கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்கானலில் வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு ‘அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவே கூடாது. ஏனென்றால் அது ஒரு எபிக் படம். எங்களுக்கே தெரியாமல் நாங்கள் ஜாலியாக எடுத்த படம். அதை திரும்ப எடுக்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் இப்படி சொல்வதற்கு மறைமுக காரணம் ஒன்றும் இருக்கிறதாம். அது என்னவென்றால் சீமராஜா படத்துக்குப் பின்னர் மீண்டும் பொன்ராமோடு இணைய வேண்டாம் என அவர் விரும்புகிறாராம். அதனால்தான் இப்படி வேறு காரணங்களை சொல்லி தட்டிக் கழிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது.. 19 மாவட்ட மாணவர்களுக்கு விருது வழங்குகிறார் விஜய்..!

கோட் படத்தின் VFX பணிகளுக்காக அமெரிக்காவில் முகாமிட்ட வெங்கட்பிரபு...!

இந்தியன் 2 படத்தோடு மோதும் பார்த்திபனின் ‘டீன்ஸ்’… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியன் 2 படத்தில் நான் நடிக்க இதுதான் காரணம்… தன் ஸ்டைலில் குழப்பமான பதிலைக் கொடுத்த கமல்!

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments