Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அட்லி படத்தில் இருந்து நயன்தாரா நீக்கம்… பின்னணி என்ன?

அட்லி படத்தில் இருந்து நயன்தாரா நீக்கம்… பின்னணி என்ன?
, செவ்வாய், 2 நவம்பர் 2021 (17:53 IST)
அட்லி ஷாருக் கான் படத்தில் இருந்து நயன்தாரா விலகியதன் பின்னணி குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது.  படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை அட்லி மும்பையில் தொடங்கியுள்ளார். இதில் நயன்தாரா மற்றும் ஷாருக் கான் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் உபயோகித்ததாக கைது செய்யப்பட்டதில் ஷாருக் கான் மன உளைச்சலில் உள்ளாராம். இதனால் படத்தின் படப்பிடிப்பு இப்போது நிறுத்தப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் படப்பிடிப்பு எப்போதும் தொடங்கும் என்பதே நிச்சயமாக அட்லி உட்பட யாருக்கும் தெரியவில்லையாம். இதனால் அந்தப்படத்தில் இருந்து நயன்தாரா விலகிவிட்டதாக சொல்லப்பட்டது.

ஆனால் நயன்தாரா விலகவில்லை என்றும் அவரின் அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகளால் ஷாருக்கானின் நிறுவனம்தான் படத்தில் இருந்து அவர் விலக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வலிமை படத்தை வாங்க முயற்சி செய்யும் உதயநிதி!