Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்லாள தேவனின் மனைவி யார்? - ராஜமௌலி அளித்த பதில்

Webdunia
புதன், 10 மே 2017 (15:59 IST)
பாகுபலி படத்தில் வில்லன் கதாபாத்திரமான பல்லாள தேவனின் மனைவி பற்றி ராஜமௌலி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
பாகுபலி முதல் பாகத்தில் பல்லாள தேவன் கதாபாத்திரமான ராணாவிற்கு ஒரு மகன் இருப்பது போலவும், அவரை, பாகுபலியின் மகன் கதாபாத்திரமான பிரபாஸ் தலையை வெட்டி கொலை செய்வது போலவும் காட்டியிருப்பார்கள்.
 
சமீபத்தில் வெளியான இரண்டாம் பாகத்தில், பல்லாள தேவன் அனுஷ்காவை விரும்புவது போலவும், ஆனால், அனுஷ்கா  பிரபாஸை திருமணம் செய்து கொள்வது போலவும் காட்டியிருக்கிறார்கள். ஆனால், பல்லாள தேவன் மனைவி தொடர்பாக எந்த காட்சியும் படத்தில் இடம்பெறவில்லை.
 
எனவே, இதுபற்றி பற்றி விளக்கம் அளித்துள்ள ராஜமௌலி “பல்லாள் தேவன், தேவசேனாவை காதலித்தார். ஆனால், அவரின் காதல் கை கூடவில்லை. அதனால், அவர் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. வாரிசு வேண்டும் என்பதற்காக ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார்” என கூறியுள்ளார். 
 
இதன் மூலம் ராணாவிற்கு இப்படத்தில் மனைவி கதாபாத்திரமே இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

96 புகழ் கௌரி கிஷனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

பர்ப்பிள் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லஷ்மி!

நான் யாரையும் திருமணம் செய்துகொள்ள சொல்வதில்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

உண்மையா உழைச்சா கூட நிப்போம்னு… டிராகன் வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்த அஸ்வத் மாரிமுத்து!

மிஷ்கின் அப்படி பேசியதற்காக நான் போன் பண்ணி திட்டினேன்… பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments