Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர்கள் மட்டும்தான் கொடுக்கிறார்கள்… நடிகைகள் எங்கே?

நடிகர்கள் மட்டும்தான் கொடுக்கிறார்கள்… நடிகைகள் எங்கே?
, வியாழன், 20 மே 2021 (18:23 IST)
கொரோனா கால பேரிடரை எதிர்கொள்ள தமிழ் சினிமா நடிகர்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க பலர் நிதி வழங்கி வரும் நிலையில் திரைப்பிரபலங்களும் நிதி வழங்கியுள்ளனர்.

நடிகர் அஜித், சூர்யா குடும்பத்தினர் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்கள் எல்லாம் நன்கொடை கொடுத்து வருகின்றனர். ஆனால் தமிழ் சினிமா முன்னணி நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமே இதுவரை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். மற்றொரு முன்னணி நடிகைகளாக நயன்தாரா மற்றும் திரிஷா எல்லாம் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லையாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேஜிஎஃப் இயக்குனருடன் இணையும் ஜூனியர் என்.டி.ஆர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு