Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்சலுடன் போட்டிபோடும் மூன்று திரைப்படங்கள் எது தெரியுமா?

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (14:05 IST)
திரைப்படங்களுக்கு 10 சதவீத கேளிக்கை வரி விதிக்கப்பட்டதற்கு திரையரங்கு உரிமையாளர்களும். திரைப்பட  தயாரிப்பாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

 
இந்நிலையில் தமிழக அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் தமிழக அமைச்சர்கள், தயாரிப்பாளர்கள் சங்கம்,  திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், சினிமா விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக கேளிகை வரி 8 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து தீபாவளிக்கு படங்கள் வெளியாவதில் ஏற்பட்ட  சிக்கல் நீங்கியது.
 
மெர்சல் படம் தீபாவளிக்கு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், புதன் கிழமை படம் வெளியாகும் என  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் அடிப்படையில் மெர்சல் வெளியாவது  உறுதியாகியுள்ளது.
 
இப்படத்திற்கு போட்டியாக மேலும் மூன்று படங்கள் வெளியாவதாக கூறப்படுகிறது. அவை நடிகர் சரத் குமார் நடிப்பில்  ‘சென்னையில் ஒரு நாள் 2’, வைபவ் மற்றும் பிரியா பவானி நடித்துள்ள ‘மேயாத மான்’ மற்றும் சசிகுமார் நடிப்பில் கொடி வீரன் ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் திரைக்கு வரும் 'உயிருள்ளவரை உஷா' திரைப்படம்.. டி ராஜேந்தர் அறிவிப்பு..!

தமிழில் அறிமுகமாகும் ‘கே ஜி எஃப்’ இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்!

தயாரிப்பாளருக்குத் திருப்தியளிக்காத ஜெயம் ரவியின் ‘ஜீனி’… மீண்டும் ஷூட்டிங்கா?

வேலை நாட்களில் சுணக்கம் காட்டும் கூலி.. ஏழாவது நாள் வசூல் எவ்வளவு?

கீர்த்தி சுரேஷுக்கு வில்லனாகும் மிஷ்கின்?

அடுத்த கட்டுரையில்
Show comments