Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்நைட் சொல்லி தூங்க சென்ற டிவி சீரியல் நடிகை தூக்கில் தொங்கிய மர்மம் என்ன?

Webdunia
சனி, 10 மார்ச் 2018 (18:58 IST)
சமீபகாலமாகவே இந்தியா முழுவதிலும் சினிமா நடிகைகள் மற்றும், டிவி சீரியல் நடிகைகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. திடீரென வாய்ப்புகள் இல்லாமல் வருமானம் குறைவது, அதிக வேலைப்பளுவால் மன அழுத்தம், காதல் தோல்வி, டார்ச்சர் போன்ற பல காரணங்கள் நடிகைகளின் தற்கொலைக்கு கூறப்படுகிறது.

இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 23 வயது மெளமிதா என்ற நடிகை இன்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கொல்கத்தா போலீசார் அவரது அறையை சோதனை செய்ததில் ஒரு கடிதத்தை கண்டெடுத்தனர். மேலும் அவரது செல்போன், சமூகவலைத்தள பக்கங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

நடிகை மெளமிதா முந்தைய நாள் இரவில் மகிழ்ச்சியுடன் குட்நைட் சொல்லிவிட்டு தூங்க சென்றதாகவும், மறுநாள் காலையில் அவர் தூக்கில் தொங்கி இறந்ததை பார்த்து தன்னால் நம்பவே முடியவில்லை என்றும் மெளமிதா தங்கியிருந்த வீட்டின் ஓனர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்

பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல், கிடைத்த வாய்ப்புகளும் கைகொடுக்காமல் போனதாலும் அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்திருக்கலாம் என்று அவரது நண்பர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

மஞ்சள் உடையில் க்யூட் லுக்கில் கலக்கும் திவ்யபாரதி!

அஜித் படத்தைத் தனுஷ் இயக்க வாய்ப்பே இல்லை… பிரபலத் தயாரிப்பாளர் உறுதி!

ஜெய் ஒரு ப்ளேபாய்… ஊமைக் குசும்பன்… பிரபல நடிகை ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments