Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களை தீண்டதகாதவர்கள் போல நடத்தினார்கள் – பிரபல தொகுப்பாளினி புகார்!

Webdunia
சனி, 13 ஜூன் 2020 (07:40 IST)
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான திவ்யா, பாரிஸில் தன்னையும் தன் கணவரையும் போலிஸார் தீண்டத்தகாதவர்கள் போல நடத்தினர் என குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்தவர் திவ்யா. இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்காக இவருக்கென்றே ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில் திருமணம் முடிந்து பாரிஸுக்கு தேனிலவு சென்ற போது அந்த நாட்டு போலிஸாருடன் நடந்த சம்பவம் ஒன்றை இவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் உரையாடலில் ‘எங்கள் பாஸ்போர்ட் மற்றும் பணம் இருந்த பர்ஸை யாரோ திருடி விட்டார்கள். அது சம்மந்தமாக அந்த நாட்டு போலிஸ் நிலையத்தில் புகாரளிக்க சென்ற போது, மூன்று ஸ்டேஷனுக்கு மேல் எங்கள் புகாரை எடுத்துக்கொள்ளாமல் அலையவிட்டனர். நான்காவதாக ஒரு ஸ்டேஷனில் தொலைந்த பொருட்களுக்கான இன்சூரன்ஸ் தொகையை கிளைம் செய்துகொள்ளுங்கள் என சொல்லிவிட்டனர். நாங்கள் சிசிடிவி கேமரா மூலமாக கண்டுபிடிக்க மாட்டீர்களா எனக் கேட்டபோது, எங்களை பார்த்து சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். எங்கள் பொருட்கள் தொலைந்து போனதைவிட அவர்கள் எங்கள் தீண்டத்தகாதவர்கள் போல நடத்தியதுதான் இன்னமும் வருத்தம் அளிக்கிறது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments