Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸ் 4ல் பங்கேற்க தனிமைப்படுத்தப்பட்ட தொகுப்பாளினி அர்ச்சனா!

பிக்பாஸ் 4ல் பங்கேற்க தனிமைப்படுத்தப்பட்ட தொகுப்பாளினி அர்ச்சனா!
, செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (14:39 IST)
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் 3 சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இது குறித்த முதல் புரோமோவை நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து பிக்பாஸ் நான்காவது சீசன் உறுதி செய்யப்பட்டது.

ஜூன் மாதம் ஒளிபரப்பாக வேண்டிய பிக்பாஸ் 4 சீசன் கொரோனா லாக்டவுனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் மாதம் முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வுகள் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் 10க்கும் மேற்பட்ட பிரபலங்களின் பெயர்கள் வந்ததிகளாக ஏற்கனவே அடிபட்டுவிட்டது.

இதில் ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன் இருவரும் உறுதி செய்யப்பட்டு வீட்டிலேயே 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்ப்போது 90ஸ் காலத்து நட்சத்திர தொகுப்பாளினியாக அர்ச்சனா பிக்பாஸ் 4ல் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளனது. மேலும், அர்ச்சனாவும் இந்நிகழ்சிக்காக தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாக வெளிவரும் தகவல்கள் கூறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடடே... அனிதா சம்பத்தா இது? சின்ன வயசு புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்!