Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவழியாக நிறைவடைந்த விஷ்ணு விஷால் & ராம்குமார் இணையும் ‘இரண்டு வானம்’ ஷூட்டிங்!

vinoth
புதன், 11 ஜூன் 2025 (12:20 IST)
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் ராம்குமார் கூட்டணியில் உருவான முண்டாசுப்பட்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர்கள் கூட்டணியில் உருவான ராட்சசன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து நான்கு ஆண்டு இடைவெளிகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்தது.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இது ஒரு காதல் பேண்டஸி திரைப்படம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கினாலும் தற்போதுதான் முடிந்துள்ளது. பெரும்பாலானக் காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளன. மொத்தம் 150 நாட்கள் இந்த படத்துக்காக படப்பிடிப்பு நடத்தியுள்ளார் இயக்குனர் ராம்குமார்.

அறிவியல் புனைகதையாக உருவாகியுள்ள இந்த படத்துக்கு ‘இரண்டு வானம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷாலுடன் மமிதா பைஜு மற்றும் முனீஸ் காந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments