Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவழியாக நிறைவடைந்த விஷ்ணு விஷால் & ராம்குமார் இணையும் ‘இரண்டு வானம்’ ஷூட்டிங்!

vinoth
புதன், 11 ஜூன் 2025 (12:20 IST)
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் ராம்குமார் கூட்டணியில் உருவான முண்டாசுப்பட்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர்கள் கூட்டணியில் உருவான ராட்சசன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து நான்கு ஆண்டு இடைவெளிகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்தது.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இது ஒரு காதல் பேண்டஸி திரைப்படம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கினாலும் தற்போதுதான் முடிந்துள்ளது. பெரும்பாலானக் காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளன. மொத்தம் 150 நாட்கள் இந்த படத்துக்காக படப்பிடிப்பு நடத்தியுள்ளார் இயக்குனர் ராம்குமார்.

அறிவியல் புனைகதையாக உருவாகியுள்ள இந்த படத்துக்கு ‘இரண்டு வானம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷாலுடன் மமிதா பைஜு மற்றும் முனீஸ் காந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த அமீர்கான்…!

கார்த்தி 29 படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... வெளியான தகவல்!

ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் அளவுக்கு ஓடிடி நிறுவனங்கள் வந்துவிட்டன – குபேரா தயாரிப்பாளர் புலம்பல்!

விஞ்ஞானத்தோடு வீம்பாக மோதுவது ஏன்? தனது ஆக்‌ஷன் காட்சிகள் குறித்து பாலையா ஓபன் டாக்!

விஜய்க்காக எழுதிய கதையில் தானே கதாநாயகனாக நடிக்கும் ப்ரதீப் ரங்கநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments