Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இப்போ நான் சூரி பத்தி பேசினா பிரச்சினை வரும்! – அமைதி காக்கும் விஷ்ணு விஷால்!

இப்போ நான் சூரி பத்தி பேசினா பிரச்சினை வரும்! – அமைதி காக்கும் விஷ்ணு விஷால்!
, வெள்ளி, 16 அக்டோபர் 2020 (21:02 IST)
நடிகர் சூரியின் பணத்தை ஏமாற்றியதாக விஷ்ணு விஷாலின் தந்தை ஆகியோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் விஷ்ணு விஷால் தற்போது எதுவும் பேச விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

நடிகர் சூரியை தயாரிப்பாளர் விஷ்ணுவிஷாலின் தந்தை அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் குடவாலா ஆகிய இருவரும் ரூ.2.70 கோடி ஏமாற்றியதாக சமீபத்தில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.50 லட்சத்திற்கும் மேல் உள்ளதால் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு சென்றுள்ளதாகவும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் தற்போது சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் தான் ஏற்கனவே அளித்திருந்த நில மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது நீதிமன்றம் சூரி அளித்த புகாரில் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா உள்ளிட்டோரிடம் நடத்திய விசாரணை என்ன என்பது குறித்து நவம்பர் மாத இறுதிக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு விவகாரம் குறித்து பேசியுள்ள நடிகர் விஷ்ணு விஷால் “வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. எங்கள் தரப்பிலான நியாயங்களை அறிக்கையாக சமர்பித்துள்ளோம். இப்போது சூரியை குறித்து பேசினால் அவர் மீது தப்பு சொல்ல வேண்டியிருக்கும். பிறகு தேவையற்ற விவாதங்கள் எழலாம். விசாரனை முடிந்து தீர்ப்பு வந்த பின் பேசுகிறேன்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 நாள் வேலை திட்டத்தில் தீபிகா படுகோனே பெயர்: அதிர்ச்சி தகவல்