Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷூட்டிங் வர மறுத்த விஷால்… 4 கோடியை இழந்த தயாரிப்பாளர்!

ஷூட்டிங் வர மறுத்த விஷால்… 4 கோடியை இழந்த தயாரிப்பாளர்!
, வியாழன், 8 ஜூலை 2021 (11:28 IST)
நடிகர் விஷால் மற்றும் கார்த்தி நடிப்பில் உருவாக இருந்த கருப்பு ராஜா வெள்ளை ராஜா படம் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது.

பிரபுதேவா இயக்கத்தில் உருவாக இருந்த படம் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’. இந்தப் படத்தில் விஷால், கார்த்தி இருவரும் ஹீரோக்களாக நடிப்பதாக கூறப்பட்டது. ஹீரோயினாக ‘வனமகன்’ சயிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இரண்டு நாட்கள் ஷூட்டிங்கும் போனார்கள். ஆனால், திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பு கைவிடப்பட்டது.

இதற்கு காரணம் விஷாலுக்கு படத்தில் தனது கதாபாத்திரத்துக்கான முக்கியத்துவம் குறைவாக இருந்ததாக நினைத்ததுதான் என சொல்லப்பட்டது. இதுபற்றி இப்போது பேசியுள்ள இந்த படத்தை தயாரிக்க இருந்த ஐசரி கணேஷ் ‘படத்தின் கதை எல்லாம் கேட்ட பிறகுதான் விஷால் நடிக்க ஒப்புக்கொண்டார். கார்த்தி சொன்னபடி படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ஆனால் விஷால் வரவே இல்லை. ஏன் என்று கேட்டாலும் பதில் இல்லை. இதனால் நான் முதலீடு செய்திருந்த 4 கோடி எனக்கு நஷ்டம்தான்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீமான் புகாரில் முகாந்திரம் இல்லை: லிங்குசாமி கதை பிரச்சனை குறித்து பாக்யராஜ்