Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஷால்-மிஷ்கின் மீண்டும் இணைவது உண்மையா?

விஷால்-மிஷ்கின் மீண்டும் இணைவது உண்மையா?
, வியாழன், 16 ஜூலை 2020 (20:33 IST)
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா நடித்த ’துப்பறிவாளன்’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. லண்டனில் முதல் கட்ட படப்பிடிப்பு மற்றும் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மிஷ்கின் மற்றும் நாயகன், தயாரிப்பாளர் விஷால் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது 
 
இதனை அடுத்து ’துப்பரிவாளன் 2’ படத்திலிருந்து மிஷ்கின் விலகினார். அதன் பின்னர் விஷால் அந்த படத்தை இயக்க இருப்பதாகவும் அதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் விஷாலும் மிஷ்கினும் இணைய இருப்பதாகவும் ’துப்பறிவாளன் 2’ படத்தை மிஷ்கினே தொடர இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் விஷாலுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தபோது மிஷ்கினுடன் விஷால் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்றும் ’துப்பறிவாளன் 2’ படத்தின் பட்ஜெட்டை மிகப்பெரிய அளவில் மிஷ்கின் விரயம் செய்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த படத்தை விஷால் தான் இயக்கி முடிக்கப்போவது உறுதி என்பது தற்போது தெரியவந்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனின் ’’டாக்டர்’’ பட பாடல் வெளியீடு