Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜயகாந்துக்குப் பிறகு விக்ரமுக்கு கிடைத்த பெருமை

விஜயகாந்துக்குப் பிறகு விக்ரமுக்கு கிடைத்த பெருமை
, வியாழன், 19 அக்டோபர் 2017 (12:57 IST)
விஜயகாந்துக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, டெல்லி பலம் ஏர்போர்ட்டில் நடைபெற்றுள்ளது.


 


டெல்லியில் உள்ள பலம் ஏர்போர்ட்டில், விஜயகாந்த் நடித்த ‘மாநகர காவல்’ படத்தின் ஷூட்டிங்தான் கடைசியாக எடுக்கப்பட்டது. 26 வருடங்கள் கழித்து தற்போது விக்ரமை வைத்து ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் ஷூட்டிங்கை அங்கு எடுத்துள்ளார் இயக்குநர் ஹரி.

சென்னையில் ஷூட்டிங் செய்தபிறகு டெல்லிக்குச் சென்று படம்பிடித்த ஹரி, பிரபு, ஐஸ்வர்யா, விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷை வைத்து இந்தக் காட்சியை எடுத்துள்ளார். மத்திய அமைச்சராக பிரபுவும், அவருடைய மனைவியாக ஐஸ்வர்யாவும் நடித்துள்ளனர். அவர்கள் ஏர்போர்ட்டில் பேசிக் கொள்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காரில் என்னையும், என் சகோதரியையும் அந்த நபர் - மனம் திறக்கும் நடிகை