சமீபத்தில் மரணம் அடைந்த தமிழ் சினிமா கதையாசிரியர் மற்றும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலத்திற்கு, நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பஞ்சு அருணாச்சலம் அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைபாளர் இளைய ராஜாவை அறிமுகப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, பல திரைப்படங்களுக்கு பாடல்கள் மற்றும் கதை, திரைக்கதை அமைத்துள்ளார். சில படங்களை இயக்கியும் உள்ளார். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் ஏற்றவாறு கதை எழுதி பல வெற்றி பாடங்களை தந்துள்ளார்.
இவர் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரின் இறுதி ஊர்வலம் தற்போது நடைபெற்று வருகிறது.
விஜயகாந்த் நடித்த நானே ராஜா நானே மந்திரி, வைதேகி காத்திருந்தாள், எங்க முதலாளி போன்ற படங்களை பஞ்சு அருணாச்சலம் தயாரித்துள்ளார்.
இந்நிலையில், தி. நகரில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன், அவரின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் உடன் வந்திருந்தார்.