Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் சேதுபதி பட ஷூட்டிங்கின்போது மக்கள் கூட்டம்....கொரோனா பரவல் அச்சம்

விஜய் சேதுபதி பட ஷூட்டிங்கின்போது  மக்கள் கூட்டம்....கொரோனா பரவல் அச்சம்
, திங்கள், 30 நவம்பர் 2020 (17:50 IST)
கொரோனா காலத்தில் சில தளர்வுகளுடன் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரொனா அச்சம் காரணமான விஜய் சேதுபதி படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் வெளியேறினார். இந்நிலையில் மீண்டும் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் மக்கள் கூடியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆண்டு எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த புறம்போக்கு படத்தை அடுத்து தற்போது இருவரது கூட்டண்யில் மீண்டும் ஒரு படம் உருவாகிவருகிறது. இப்படத்திற்கு லாபம் என்ற பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தில்கலையரசன், ஜகபதிபாபு, சாய் தன்ஷிகா, உத்தரன்,ஹரிஸ் உத்தமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். டி. இமான் இசைமயமைத்து வருகின்றனர்.

இப்படத்தை விஜய்சேதுபதி புரொடெக்சன்ஸ் மற்றும் இயக்குநர் 7.சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

இப்படத்தின் டிரெயிலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது இப்படத்தி கிளைமாக்ஸ் காட்சிகள் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் ஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகை ஸ்ருதிஹாசன் கொரொனா அச்சம் காரணமாக வெளியேறினார்.

மேலும், 10 நாட்களுக்கு மேலாக கிருஷ்ணகிரி பகுதியில் ஹூட்டிங் நடைபெற்று வருவதால் நடிகர் விஜய் சேதுபதியைப் பார்க்க  இப்படப்பிடிப்புப் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதுவதல் படக்குழு பெரும் சிரமத்தை மேற்கொண்டுள்ளது. இதனால் தொற்று பரவும்  அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜமௌலியின் ’’ஆர்.ஆர்.ஆர் ’’ படம் குறித்த புதிய அப்டேட்….ரசிகர்கள் மகிழ்ச்சி