தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பூரி ஜெகன்னாத். அவரின் பல ஹிட் படங்கள் தமிழிலேயே ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளன. எம் குமரன் படமெல்லாம் அவர் இயக்கிய படத்தின் ரீமேக்தான். ஆனால் தற்போது அவர் ஒரு பின்னடைவில் உள்ளார். விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவான லைகா திரைப்படம் பேன் இந்தியா ரிலீஸாக வந்தது. ஆனால் படுதோல்வி அடைந்தது.
இதன் காரணமாக அவரின் அடுத்த படம் தொடங்குவதில் சிக்கல் உருவானது. இந்நிலையில் தற்போது அவர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு பேன் இந்தியா படத்தை இயக்கி, தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கை ஜூனில் அவர் தொடங்கவுள்ளார். இந்நிலையில் இப்போது இந்த படத்தில் அடுத்தடுத்து பிரபல நடிகர்கள் இணைந்து வருகின்றனர். ஏற்கனவே தபு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் தற்போது துனியா விஜய் மற்றும் நிவேதா தாமஸ் ஆகியோரும் இணைந்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த படத்துக்கு பெக்கர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் ஒரு போஸ்டர் பரவியது. அந்த போஸ்டர் தத்ரூபமாக இருந்ததால் அதுதான் உண்மையான தலைப்பு என்று ரசிகர்கள் நம்பத் தொடங்கினர். ஆனால் தற்போது இதுபற்றி பேசியுள்ள விஜய் சேதுபதி இன்னும் அந்த படத்துக்கு நாங்கள் தலைப்பே வைக்கவில்லை. அதற்குள் இணையத்தில் போஸ்டர் ஒன்றை ரசிகர்கள் பகிர, பலரும் அதை உண்மையென்று நம்பிவிட்டனர்” எனக் கூறியுள்ளார்.