Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ்… படத்துவக்க நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி!

vinoth
திங்கள், 4 மார்ச் 2024 (14:06 IST)
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன  சில திரைப்படங்கள் சரியாகப் போகவில்லை.

இதனால் ஒரு சிறு இடைவெளி எடுத்துக்கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது மீண்டும் ‘வளையம்’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக தேவ் என்பவர் அறிமுகம் ஆகிறார். ராட்சசன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.

மற்ற முக்கிய வேடங்களில் சேத்தன், தமிழ், பிரதீப் ருத்ரா, ஹரிஷ் பெரேடி, சுரேஷ் மேனன் ஆகியோர் நடிக்க மகேந்திர எம். ஹென்றி இயக்குகிறார். இந்தப் படத்துக்கு மைக்கேல் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்த நிலையில் விஜய் சேதுபதி நட்புக்காக அந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments