Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனிதனாகவும் உயர்ந்துகொண்டே செல்லும் விஜய் சேதுபதி

மனிதனாகவும் உயர்ந்துகொண்டே செல்லும் விஜய் சேதுபதி
, வெள்ளி, 23 ஜூன் 2017 (11:38 IST)
நல்ல நடிகர் என்று பெயரெடுத்த விஜய் சேதுபதி, நல்ல மனிதன் என்றும் பெயரெடுத்துள்ளார்.


 


ஒரு ஹீரோவிடம் கதைசொல்லி கால்ஷீட் வாங்குவது என்பது, தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பது போல் கஷ்டமான விஷயம். ஹீரோவைச் சந்திப்பதற்கே மூக்கால் முக்க வேண்டிய காலம் இது. அப்படி கஷ்டப்பட்டு விஜய் சேதுபதியைச் சந்தித்து கதை சொல்லியிருக்கிறார் புதுமுக இயக்குநர் ஒருவர். விஜய் சேதுபதிக்கும் கதை பிடித்துவிட்டது. ஆனால், அதில் ஒரு சிக்கல்.

“எனக்கு இந்தக் கதை பிடிச்சிருக்கு. ஆனா, நிறைய படங்கள்ல நடிச்சிகிட்டு இருக்கேன். அதனால், என்னால இப்போதைக்கு கால்ஷீட் தரமுடியாது. அதுக்காக, உங்களை மாதிரி நல்ல இயக்குநர்களை காக்க வைக்கவும் முடியாது. நானே ஒரு கோடி ரூபாய் தாரேன். புதுமுகங்களை வச்சு படம் பண்ணுங்க. படம் நல்லாருந்தா, நானே ரிலீஸ் பண்ணித் தாரேன். அதுக்குள்ள நானும் கமிட்மெண்ட்ஸை முடிச்சிடுவேன். அப்புறமா நாம சேர்ந்து படம் பண்ணலாம்” என்று சொல்லியிருக்கிறார் விஜய் சேதுபதி. அதைக் கேட்டதும், இயக்குநராக அறிமுகமாகவிருக்கும் அந்த நபருக்கு கண்கலங்கி விட்டதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிப்பது பெரிய பொறுப்பாக நினைக்கிறேன்: நடிகை ஸ்ரீதேவி பேச்சு!