Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பட பாடகர் கொரொனா விழிப்புணர்வு பாடல்…

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (20:56 IST)
தடுப்பூசியால் மட்டும்தான் நாம் இந்தக்  கொடிய காலத்தைக் கடந்து செல்ல முடியும் என்று பின்னணிப் பாடகர் கிரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. சில மாநிலங்களில் அதிகரித்து வந்தாலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஓரளவு கொரொனா தொற்றுக் குறைந்து வருகிறது.

இந்நிலையில் மக்களும் பல்வேறு தொழில்பிரிவினர் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மாநில அரசும், அமைச்சர்களும் , தொண்டு நிறுவனங்களும், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், மற்றும் விளையாட்டு பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவிகளைப் பணமாகவும் பொருளாகவும் வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில், தடுப்பூசியால் மட்டும்தான் நாம் இந்தக்  கொடிய காலத்தைக் கடந்து செல்ல முடியும் என்று பின்னணிப் பாடகர் கிரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவிவருவதால் இதைத் தடுப்பதற்காக அரசு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதேபோல் சினிமா நடிகர்களும், கலைஞர்களும் கொரொனா விழிப்புணர்வு வீடியோக்களும் பாடல்களும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  நடிகரும் பாடகருமான கிரிஸ் கொரொனா விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ளார். இப்பாடலை ஐபிஎஸ் அதிகாரி சிவக்குமார் எழுதியுள்ளார். இப்பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தி 29 படத்தில் இருந்து விலகினாரா வடிவேலு?.. காரணம் என்ன?

கதாநாயகனாகவும், இயக்குனராகவும் அறிமுகமாவும் V J சித்து!

’எம்புரான்’ படத்தில் முல்லை பெரியாறு காட்சிகள்: தமிழக விவசாயிகள் கண்டனம்..!

மோகன்லாலின் எம்புரான் படத்தின் காட்சிகள் நீக்கம்… ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கண்டனம்!

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments