Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கன்னட சூப்பர்ஸ்டாரை இயக்கும் கோலி சோடா இயக்குனர்!

கன்னட சூப்பர்ஸ்டாரை இயக்கும் கோலி சோடா இயக்குனர்!
, சனி, 21 நவம்பர் 2020 (10:12 IST)
தமிழில் இயக்குனராக அறியப்பட்ட ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இப்போது கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமாரை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

தமிழில் முன்னணி ஒளிப்பதிவாளராக அறியப்பட்ட விஜய் மில்டன் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கோலி சோடா, 10 என்றத்துக்குள்ள மற்றும் கடுகு ஆகிய படங்களை இயக்கினார். அதன் மூலம் அவருக்கு நல்ல இயக்குனர் என்ற பெயர் கிடைத்தது. இந்நிலையில் அவர் இப்போது கன்னட முன்னணி நடிகர் சிவராஜ் குமார் நடிக்கும் புதிய படத்தை எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிகை அஞ்சலி முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்து சிவராஜ் தனது டிவிட்டரில் புகைப்படத்தைப் பகிர்ந்து ‘மீண்டும் வேலைக்கு வந்துள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாடகர் எஸ்.பி.பி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ திறப்பு...