Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போலீசாரின் சேவையை பாராட்டி கறிவிருந்து வைத்த விஜய் ரசிகர்கள்!

போலீசாரின் சேவையை பாராட்டி கறிவிருந்து வைத்த விஜய் ரசிகர்கள்!
, வியாழன், 9 ஏப்ரல் 2020 (15:35 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு     நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதனால் சாதாரண தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கு ஒரு நாள் பொழுதே திண்டாட்டமாக செல்கிறது. இதையடுத்து இருப்பவர்கள் இயலாதோருக்கு கொடுத்து உதவி வருகின்றனர். அரசு அறிவித்துள்ள சலுகைகளையும் தாண்டி சில தொண்டு நிறுவனங்களும் முன் வந்து ஏழை எளியோருக்கு உதவி வழங்கி வருகின்றனர்.

மேலும், அஜித், விஜய், ரஜினி, சூர்யா, தனுஷ், யோகிபாபு உள்ளிட்ட பிரபலங்களின் ரசிகர்களும் தங்களால் முடிந்த உதவியை வழங்கி வருகின்றனர். அந்தவகையில் தற்போது புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் காவல் துறையினரின் சேவையை பாராட்டி அவர்களுக்கு பிரியாணி வாங்கி கொடுத்து உதவியுள்ளனர். விஜய் ரசிகர்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனி ஒருவனில் அஜித் நடிக்கவேண்டியது… ஆனால்? – மனம்திறந்த இயக்குனர் !