Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டது ஏன்? ....நடிகை குஷ்பு விளக்கம்

விஜய் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டது ஏன்? ....நடிகை குஷ்பு விளக்கம்
, செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (18:16 IST)
.
நடிகர் விஜய் இன்று காலை நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சைக்கிளில் வந்தது சமூகவலைதளங்களில் விவாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சென்னையில் உள்ள திரையுலக பிரபலங்கள் தங்களது வாக்கு சாவடிகளில் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

விஜய் நீலாங்கரையில்உள்ள வாக்குச்சாவடிக்கு வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு வந்து ஓட்டளித்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். விஜய் சைக்கிளில் வந்ததற்கும் ஒரு அரசியல் உள்நோக்கம் உள்ளது என பேசப்படும் இநேரத்தில் அதற்கான காரணம் என்னெவனில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிரொலிக்கும் விதமாக நடிகர் விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்ததாக அவரது ரசிகர்கள் இணையத்தில் கருத்து பரப்பி வருகின்றனர்.

இதுகுறித்து நடிகை குஷ்பு கூறியுள்ளதாவது:

நடிகர் விஜய் தனது நேரத்தை  வீணாக்கக்கூடாது என்பதற்காகவே  சைக்கிளில் சென்று ஓட்டுப்போட்டுள்ளார். இதை அரசியலாக்க வேண்டாம் என தெரிவித்துக்கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னணி நடிகைக்கு கொரோனா பாசிடிவ்....திரையுலகினர் அதிர்ச்சி