Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவசாயிகள் படத்தில் நடிப்பாரா விஜய்?

விவசாயிகள் படத்தில் நடிப்பாரா விஜய்?
, வியாழன், 15 ஜூன் 2017 (16:50 IST)
விவசாயிகளுக்காக குரல் கொடுத்த விஜய், அவர்கள் சம்பந்தப்பட்ட படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


 


‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ போன்ற வித்தியாசமான படங்களால் கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். ‘காக்கா முட்டை’ படத்துக்காக தேசிய விருது வென்றவர். இயல்பான உண்மைக் கதைகளைப் படமாக எடுக்கும் இவர், அடுத்ததாக ‘கடைசி விவசாயி’ என்ற படத்தை இயக்கப் போகிறார்.

இந்தியாவில் தற்போது முக்கியப் பிரச்னையாக, குறிப்பாகத் தமிழ்நாட்டில் நிலவும் விவசாயப் பிரச்னையைக் கையில் எடுத்துள்ளார் மணிகண்டன். இதனால், ஊர் ஊராகச் சென்று விவசாயிகளைச் சந்தித்து வருகிறார். அவர்களின் உண்மைக் கதையை மையமாக வைத்துதான் இந்தப் படத்தை எடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார் மணிகண்டன். கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகளுக்காக குரல் கொடுத்த விஜய், இந்தப் படத்தில் நடிப்பாரா? என்று கேள்வி கேட்கிறார்கள் சினிமாக்காரர்கள்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனா உதவியோடு பாகுபலியை வீழ்த்திய தங்கல்