Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘காதலர் தினத்தில் நயன்தாரா படத்தின் முக்கிய அறிவிப்பு: விக்னேஷ் சிவன்

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (12:36 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வந்த திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
 
பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் என்பதால் ‘காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தின் அறிவிப்பு மட்டுமின்றி விக்னேஷ் சிவன், நயன் தாரா திருமணம் குறித்த அறிவிப்பும் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
இந்த படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத், ஏற்கனவே மூன்று பாடல்களை கம்போஸ் செய்து விட்டதாகவும் இன்னும் இரண்டு பாடல்களை அவர் கம்போஸ் செய்ய உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
 
கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை லலித் தயாரித்து வருகிறார் என்பதும் இவர் ஏற்கனவே மாஸ்டர் படத்தை தயாரித்து உள்ளார் என்பதும் ’கோப்ரா’ உள்பட ஒரு சில படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments