விடாமுயற்சி படம் வராதது எனக்கு வருத்தம்தான்… அருண் விஜய் பதில்!

vinoth
வெள்ளி, 10 ஜனவரி 2025 (08:56 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படத்தில் முதலில் சூர்யாவே நடித்து தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. சில நாட்கள் ஷூட்டிங் சென்ற பின்னர் சூர்யாவை வைத்து நிஜ லொகேஷன்களில் படமெடுக்க முடியவில்லை என்பதால் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகிக் கொண்டார்.

அதன்  பின்னர் அருண் விஜய்யைக் கதாநாயகனாக்கி வணங்கான் படத்தை இயக்கி முடித்துள்ளார் பாலா. மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில், ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த  படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரிக்க படம் பொங்கலை முன்னிட்டு இன்று ரிலீசாகிறது.

இந்நிலையில் படம் சம்மந்தமாகப் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசிய நடிகர் அருண் விஜய் “விடாமுயற்சி படமும் பொங்கலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்ட போது நான் இயக்குனர் மகிழுக்கு போன் செய்து வாழ்த்தினேன். அதை யாருமே போட்டியாகப் பார்க்கவில்லை. எங்களுக்கும் ஒரு சிறிய அளவில் தியேட்டர்கள் கிடைத்தன. ஆனால் விடாமுயற்சி இப்போது ரிலீஸ் ஆகவில்லை என்பது எனக்கும் வருத்தம்தான். ஆனால் சீக்கிரமே அந்த படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெறும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மதுரை புதிய மேம்பாலத்திற்கு 'வீரமங்கை வேலுநாச்சியார்' பெயர்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

சென்னையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம்: இன்று சவரன் ரூ.96,320

தமிழகத்தில் மழைக்கு நீண்ட இடைவெளி: சென்னையில் வெயில்!

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

அடுத்த கட்டுரையில்
Show comments