Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு & வெற்றிமாறன் இணையும் படத்தின் தயாரிப்பாளர் இவரா?.. வெளியான தகவல்!

vinoth
ஞாயிறு, 15 ஜூன் 2025 (13:19 IST)
சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணையவுள்ள ‘வாடிவாசல்’ திரைப்படம் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  வெற்றிமாறனின் நீண்டகால படமாக்கல் பாணியால் சூர்யா ‘வாடிவாசல்’ படத்தைத் தற்காலிகமாக கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஒரு படம் உடனடியாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதமே தொடங்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணுவே தயாரிப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சிம்பு மற்றும் வெற்றிமாறன் இணையும் படத்தைத் தயாரிக்கப் போவது துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே சாந்தணு நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான ‘இராவணக் கோட்டம்’ படத்தினை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேட் கேர்ள் படத்தின் டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கவேண்டும்- நீதிமன்றம் உத்தரவு!

பிரதீப் ரங்கநாதனின் ‘டயூட்’ படத்துக்கு ஓடிடியில் இவ்வளவு பெரிய டிமாண்ட்டா?

வெளி தயாரிப்பாளர் படத்தில் கமல் நடிக்க மாட்டாராம்.. 10 வருஷமா அதுதானே நடக்கிறது?

கமல் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாரா சாய்பல்லவி? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments