Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாடிவாசல் படத்துக்கு உருவாகியுள்ள எதிர்பார்ப்புக்கு நான் பொறுப்பேற்க முடியாது- வெற்றிமாறன் பொறுப்புத் துறப்பு!

Advertiesment
வெற்றிமாறன்

vinoth

, திங்கள், 19 மே 2025 (08:35 IST)
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலோடு காத்திருக்கும் படங்களில் ஒன்று சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணையும் ‘வாடிவாசல்’ திரைப்படம். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டும் வெற்றிமாறன் மற்றும் சூர்யா ஆகியோரின் அடுத்தடுத்த பட வேலைகளால் இந்த படம் தாமதமாகிக் கொண்டே வந்தது.

விடுதலை 2 திரைப்படம் ரிலீஸையடுத்து வெற்றிமாறன் தற்போது ‘வாடிவாசல்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ‘வாடிவாசல்’ திரைப்படத்துக்கான திரைக்கதையை செப்பனிடும் பணியை வெற்றிமாறன் தன்னுடையக் குழுவினரோடு செய்து வருவதாக சொல்லப்பட்டது. இந்த படத்துக்காக ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

இதுபற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன் “இந்த படத்துக்கு உருவாகியுள்ள எதிர்பார்ப்புக்கு நான் பொறுப்பேற்க முடியாது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் படம் வந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். என்னுடைய எல்லாப் படங்களுக்கும் நான் முழு உழைப்பையும் கொடுக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெட்ரோ படத்தின் ஒட்டுமொத்த வசூல் விவரத்தை வெளியிட்ட படக்குழு!