Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாநாடு படத்தை செல்போனில் பதிவு செய்யாதீர்கள்… வெங்கட் பிரபு வேண்டுகோள்!

மாநாடு படத்தை செல்போனில் பதிவு செய்யாதீர்கள்… வெங்கட் பிரபு வேண்டுகோள்!
, திங்கள், 29 நவம்பர் 2021 (10:41 IST)
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது மாநாடு திரைப்படம்.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது. ரிலிஸ் ஆனதில் இருந்து ஐந்து நாட்களாக வசூல் குறையாமல் இருப்பதே இந்த படத்தின் வெற்றியின் சாட்சி.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் செல்போனில் பதிவு செய்யப்பட்டு ரசிகர்களால் சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்றன. இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள இயக்குனர் வெங்கட்பிரபு ‘ரசிகர்கள் செல்போனில் பதிவு செய்து அதை பரப்ப வேண்டாம். அனைவரும் திரையரங்கில் வந்து படத்தை பாருங்கள்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இமான் அண்ணாச்சிக்கு கிடைத்த கேப்டன் பதவி: ஆனால் திடீரென ஏற்பட்ட திருப்பம்!