Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளியேறினார் வேல்முருகன்: நூலிழையில் தப்பித்த ஆஜித்!

வெளியேறினார் வேல்முருகன்: நூலிழையில் தப்பித்த ஆஜித்!
, ஞாயிறு, 1 நவம்பர் 2020 (09:21 IST)
வெளியேறினார் வேல்முருகன்: நூலிழையில் தப்பித்த ஆஜித்!
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் என 11 பேர் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் அவர்களின் நேற்று  சனம், பாலாஜி, ரியோ, சோம்சேகர் மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகிய 5 பேர் காப்பாற்றப்பட்டனர் 
 
இதனையடுத்து இன்று வெளியான முதல் புரோமோவில் வேல்முருகன் வெளியே செல்லும் காட்சிகள் இருப்பதால் இன்று அவர் தான் எவிக்சன் செய்யப்பட்டார் என்பது உறுதியாகி உள்ளது. மேலும் வேல்முருகனுக்கு ஆஜித்துக்கும் இடையே மிகக் குறைந்த வித்தியாசம்தான் இருந்ததாகவும் நூலிழையில் ஆஜித் தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் இன்று பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வரும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இவரது வரவால் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’இந்தியன் 2’ கைவிடப்படுகிறதா? ஷங்கரின் அடுத்த திட்டம் என்ன?