Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆதரவற்ற விலங்குகளுக்கு 2 டன் உணவுப் பொருட்கள்… உதயநிதியை சந்தித்த வரலட்சுமி சரத்குமார்!

ஆதரவற்ற விலங்குகளுக்கு 2 டன் உணவுப் பொருட்கள்… உதயநிதியை சந்தித்த வரலட்சுமி சரத்குமார்!
, வியாழன், 3 ஜூன் 2021 (17:31 IST)
ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் ஆதரவற்ற விலங்குகளுக்கு 2 டன் உனவுப் பொருட்கள் வழங்கப்படும் விவரத்தை நடிகை வரலட்சுமி சரத்குமார் உதய நிதி ஸ்டாலினிடம் அளித்துள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் Save Shakti-Sankalp Beautiful World-Pedigree India என்ற அமைப்பில் இணைந்து ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளித்து வருகிறார். இந்நிலையில் இப்போதைய ஊரடங்கு காலத்தில் 2 டன் உணவுப் பொருட்களை அந்நிறுவனம் வழங்கியுள்ளது. இது சம்மந்தமாக நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார்.

இந்த சந்திப்பு சம்மந்தமாக ‘Save Shakti-Sankalp Beautiful World-Pedigree India சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற விலங்குகளுக்கு 2டன் உணவு வழங்கபட்டு வருகிறது.இச்சேவையை அனைத்து தரப்புக்கும் கொண்டுசேர்க்க அதன் விவரத்தை Save Shakti அறக்கட்டளை நிறுவனர் வரலட்சுமி இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு நன்றி.வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகம் விரும்பப்பட்ட பெண்ணாக ஸ்ருதிஹாசன் தேர்வு!