Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா ரூ.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் – வன்னியர் சங்கம் வக்கீல் நோட்டீஸ்

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (11:43 IST)
வன்னியர் சமூகத்தை தவறாக சித்தரித்ததற்காக நடிகர் சூர்யா நஷ்டஈடு தர வேண்டும் என வன்னியர் சங்கம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு பாராட்டுகளும், எதிர்ப்புகளும் நிலவி வருகின்றன.

முக்கியமாக இந்த படத்தில் வன்னியர் சமுதாயத்தை திட்டமிட்டு தவறாக சித்தரித்திருப்பதாக அச்சமுதாயத்தினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ” ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததற்காக நடிகர் சூர்யா 7 நாட்களுக்குள் ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்” என வன்னிய சங்க தலைவர் பு.தா.அருள்மொழி என்பவர் நடிகர் சூர்யாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிற மொழிப் படங்களை இயக்கும் போது மாற்றுத்திறனாளி போல உணர்கிறேன்… AR முருகதாஸ் பதில்!

மீண்டும் இணையும் ‘தலைவன் தலைவி’ கூட்டணி… முக்கிய வேடத்தில் மணிகண்டன்!

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments