Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெய்பீம் படத்துக்கு எந்த விருதும் தரக்கூடாது! – மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்!

ஜெய்பீம் படத்துக்கு எந்த விருதும் தரக்கூடாது! – மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்!
, வியாழன், 18 நவம்பர் 2021 (15:39 IST)
ஜெய்பீம் திரைப்படத்திற்கு விருதுகள் தரக்கூடாது என மத்திய, மாநில அரசுகளுக்கு வன்னியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நடிகர் சூர்யா நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலரது பாராட்டுகளை பெற்றது.

அதேசமயம் இந்த படத்தின் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இந்த படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ள வன்னியர் சங்கம், ஜெய்பீம் திரைப்படம் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்து காட்டுவதாகவும், அதனால் அந்த படத்திற்கு எந்த விதமான விருதும், அங்கீகாரமும் அரசு வழங்கக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாராவின் பிறந்தநாள் பார்ட்டியில் சமந்தா - வைரலாகும் புகைப்படம்!