Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபுதேவா படத்தில் ஒப்பந்தமான சின்னத்திரை நயன்தாரா!

பிரபுதேவா படத்தில் ஒப்பந்தமான சின்னத்திரை நயன்தாரா!
, திங்கள், 14 மார்ச் 2022 (09:04 IST)
நடிகை வாணிபோஜன் இப்போது தன் கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார்.

ஒரு காலத்தில் சீரியலில் நடிக்கும் நடிகைகளை சினிமாவில் நடிக்க வைக்க யோசிப்பார்கள் . அப்படியே நடித்தாலும் அண்ணி தங்கை வேடங்கள் மட்டுமே கொடுப்பார்கள். அதை முதலில் உடைத்தவர் பிரியா பவானி சங்கர். சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்று வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வருகிறார்.அவருக்குப் பிறகு சின்னத்திரை நயன்தாரா என்று சீரியல் ரசிகர்களால் அழைக்கப்பட்டு பெரும் பிரபலமடைந்தவர் நடிகை வாணி போஜன்.

ஆரம்பத்தில் விமான பணிப் பெண்ணாக இருந்து பின்னர் மாடலிங் திரையில் நுழைந்தார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பில் தான் சீரியல் நடிகையானார்.  சன் டிவியில் ஒளிபரப்பான " தெய்வமகள் " சீரியலில் நடித்து குறுகிய காலத்தில் குடும்ப ரசிகர்களிடையே படு பேமஸ் ஆகிவிட்டார். அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைய அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது. அசோக் செல்வன் நடித்த  ‘ஓ மை கடவுளே’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் மீரா அக்காவாக நுழைந்துவிட்டார்.

அதையடுத்து வரிசையாக பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வரும் வாணி இப்போது பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் அன்பரசன் இயக்கும் ரேக்ளா என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் வாணிபோஜன் செவிலியராக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 வருடங்களுக்கு பிறகு பெரிய திரையில் கமல்ஹாசன்… கொண்டாட்டத்த ஆரம்பிக்கிங்களா?