Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமான் மகனுக்கு கவிதையால் வாழ்த்து கூறிய வைரமுத்து!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (11:00 IST)
சீமான் மகனுக்கு வாழ்த்து தெரிவித்து வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதிய கவிதை தற்போது வைரலாகி வருகிறது 
 
முன்னாள் அதிமுக அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழி என்பவரை திருமணம் செய்து கொண்ட சீமானுக்கு ஒரு மகன் உள்ளார் 
 
அவர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோவை பார்த்த வைரமுத்து, சீமான் மகனுக்கு எழுதிய வாழ்த்து கவிதையில் கூறியிருப்பதாவது:
 
காளிமுத்து பேரன்
செந்தமிழன் சீமானின்
திருச்செல்வன் மாவீரன்
தமிழாற்றுப்படையோடு
உறவாடி விளையாடும்
ஒளிப்படங்கள் கண்டேன்
 
நாளையொரு பூமலர
நல்லதமிழ்த் தேன்சிதற
வாழையடி வாழையென
வளருமடா தமிழ்க்கூட்டம்
என்று வாய்விட்டுச்
சொல்லிக்கொண்டேன்
 
தமிழாற்றுப்படையோடும் 
தமிழர் படையோடும்
வா மகனே!

தொடர்புடைய செய்திகள்

ரஜினியின் ’கூலி’ படத்தில் சத்யராஜ் நடிப்பது கன்பர்ம்.. என்ன கேரக்டர் தெரியுமா?

சரத்குமார் படங்களை இயக்குனர் திடீர் மறைவு.. திரையுலகினர் இரங்கல்..!

வாழ்நாளில் சில பாத்திரங்கள்தான் இப்படி அமையும்… 18 ஆண்டுகள் நிறைவு செய்த புதுப்பேட்டை குறித்து தனுஷ்!

தனுஷின் ராயன் படத்தின் ஆடியோ & டிரைலர் ரிலீஸ் தேதி இதுதான்!

இந்தியன் படத்தின் ரி ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments