Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமான் மகனுக்கு கவிதையால் வாழ்த்து கூறிய வைரமுத்து!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (11:00 IST)
சீமான் மகனுக்கு வாழ்த்து தெரிவித்து வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதிய கவிதை தற்போது வைரலாகி வருகிறது 
 
முன்னாள் அதிமுக அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழி என்பவரை திருமணம் செய்து கொண்ட சீமானுக்கு ஒரு மகன் உள்ளார் 
 
அவர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோவை பார்த்த வைரமுத்து, சீமான் மகனுக்கு எழுதிய வாழ்த்து கவிதையில் கூறியிருப்பதாவது:
 
காளிமுத்து பேரன்
செந்தமிழன் சீமானின்
திருச்செல்வன் மாவீரன்
தமிழாற்றுப்படையோடு
உறவாடி விளையாடும்
ஒளிப்படங்கள் கண்டேன்
 
நாளையொரு பூமலர
நல்லதமிழ்த் தேன்சிதற
வாழையடி வாழையென
வளருமடா தமிழ்க்கூட்டம்
என்று வாய்விட்டுச்
சொல்லிக்கொண்டேன்
 
தமிழாற்றுப்படையோடும் 
தமிழர் படையோடும்
வா மகனே!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments