தீயாய் எழுந்து நின்றாய்.. காற்றாய் பயணமுற்றாய்: ஸ்டாலினுக்கு வைரமுத்து கவிதை மழை!

Webdunia
திங்கள், 3 மே 2021 (18:29 IST)
திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். முதல் முதலாக அவர் முதல்வர் பதவியை ஏற்க உள்ளதை அடுத்து பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் 
 
அந்த வகையில் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் கவிஞருமான வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கவிதை ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த கவிதையில் அவர் கூறியிருப்பதாவது
 
 
கலைஞர் திருமகனே! 
கண்ணுக்கு இனியவனே
நிலம் போல் பொறுமை கண்டாய்! 
நீர் போல் இனிமை கொண்டாய்!
தீயாய் எழுந்து நின்றாய்.. 
காற்றாய் பயணமுற்றாய்...
அதனால்தான்வான்போல் வளர்ந்து நிற்கிறாய்
உன்வெற்றி புறவழிப்பட்டது அல்ல... 
அறவழிப்பட்டது
அதனால்தான் நினைவிடத்தில் நிமிர்ந்து உட்கார்ந்து
கண்ணாடி கழற்றி கண் துடைக்கிறார் கலைஞர்
இனி இனமொழியை மீட்டெடுக்கும் உனது கரம்!
எழுதுகோலில் பாட்டெடுக்கும் எமது குலம்!!
 
இவ்வாறு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments