Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரமுத்துவை முதலில் பாட எழுதவைத்தது என் அப்பாதான்… ஆனால் அதை அவர் மறைத்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

vinoth
திங்கள், 23 செப்டம்பர் 2024 (14:09 IST)
தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலத்தில் கோலோசிய பாடல் ஆசிரியராக இருந்தவர் வைரமுத்து. ஆனால் சமீபகாலமாக அவருக்கு பாடல் வாய்ப்புகள் அதிகமாக வருவதில்லை. அதற்கு வைரமுத்து பாடகி சின்மயியால் மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளானதும் ஒரு காரணம். இதன் காரணமாக ஏ ஆர் ரஹ்மான் மற்றும் மணிரத்னம் ஆகியோர் அவரை விட்டுப் பிரிந்தனர்.

அதனால் அவர் இப்போது இலக்கியம், தனி ஆல்பம் போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார்.  இதற்கிடையில் அவர் முகநூலிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். ஆனாலும் அவரை சுற்றி அடிக்கடி சர்ச்சைகள் சூழந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும், இயக்குனர் பாஸ்கரின் மகனுமான பாலாஜி பிரபு வைரமுத்து பற்றி பகிர்ந்துள்ள தகவல் கவனம் ஈர்த்துள்ளது. அதில் “வைரமுத்து அவர்களை என்னுடைய அப்பாதான் முதல் முதலாக அவர் இயக்கிய ‘சூலம்’ படத்துக்காக இரண்டு பாடல்களை எழுத வைத்தார். ஆனால் சுலம் ரிலீஸாவதற்கு முன்பாகவே நிழல்கள் படம் ரிலீஸாகிவிட்டது. அதில் அவர் எழுதிய பாடல் ஹிட்டாகிவிடவே அதுதான் தன்னுடைய முதல் படம் என்று சொல்லிவிட்டார்.” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் தில்லி பாபு நினைவேந்தல் கூட்டம்!

“ஹிட்லர்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!!

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments