பேச்சுவார்த்தை சுமூகம்… ஷங்கருக்கு 4 கோடி கொடுக்கும் வடிவேலு!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (13:16 IST)
இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தின் பிரச்சனையில் சுமூகமாக பேச்சுவார்த்தை முடிய உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்கவில்லை. இடையில் சில படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் அவர் பெயர் சொல்லும் படங்களாக அமையவில்லை. இந்நிலையில் தனது வெற்றிப்படமான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்தார். இதனால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டது.

இந்நிலையில் இப்போது முன்னணி தயாரிப்பாளர்கள் சிலர் சேர்ந்து அந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துகின்றனராம். மேலும் இந்த பிரச்சனைகள் விரைவில் முடிக்கப்பட்டு வடிவேலு வரிசையாக படங்களில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

இதன் மூலம் படத் தயாரிப்பாளரான ஷங்கருக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் 4 கோடியை வடிவேலு தர சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடிவேலுவால் ஷங்கருக்கு 7 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பையும் இணைத்து வைத்தது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாருவின் காலில் விழுந்து கதறிய ரம்யா.. அப்படி என்ன தான் நடந்தது?

எனக்கும் நாகேஷுக்கும் மட்டும்தான் அது தெரியும்.. இப்படிலாம் நடந்திருக்கா?

மகேந்திரன் பற்றி சொன்னதுல என்ன தப்பு? ராஜகுமாரனுக்காக வக்காளத்து வாங்கும் பயில்வான் ரங்கநாதன்

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments