Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“விவேக் இறந்தப்ப நான் போகலன்னு விமர்சிச்சாங்க… நானே அப்போ…” – முதல் முறையாக மனம் திறந்த வடிவேலு!

vinoth
வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (11:06 IST)
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு திடீரென இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் தமிழ் சினிமா உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. பலர் நேரில் சென்று அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஆனால் விவேக்கின் நெருங்கிய நண்பரும் சக நடிகருமான வடிவேலு அஞ்சலி செலுத்த செல்லவில்லை. மாறாக உணர்ச்சிவசப்பட்டு பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பேசிக் கொண்டிருக்கும்போதே கண்ணீர் சிந்தினார் வடிவேலு.

இந்நிலையில் இப்போது வடிவேலு ஏன் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்லவில்லை என்பது குறித்துப் பேசியுள்ளார். அதில் “நான் விவேக் இறந்தப்போ போகலன்னு நெறயப் பேர் பேசினாங்க. நான் அவங்க வீட்டுக்குப் போய் அவன் மனைவி, குழந்தைங்க கிட்ட எல்லாம் விசாரிச்சேன். அந்த நேரத்துல நானும் ரொம்ப மோசமாதான் இருந்தேன். எங்க வீட்டுலயே எல்லாரும் பயத்துலதான் இருந்தாங்க. அதனாலதான் நான் போகல” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ரஜினிக்குக் கதை சொல்ல அந்த இயக்குனரை அனுப்பினேன்’… ஆனால்?- கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த தகவல்!

வெண்ணிற உடையில் ரித்திகா சிங்கின் க்யூட் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

“கேம்சேஞ்சர் கதை ஏன் ஹிட்டாகவில்லை என்று…” – கார்த்திக் சுப்பராஜ் பதில்!

சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments