Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் நடித்த காட்சியைப் பார்த்து நானே அழுதுவிட்டேன்… மாமன்னன் 50 ஆவது நாளில் வடிவேலு நெகிழ்ச்சி!

நான் நடித்த காட்சியைப் பார்த்து நானே அழுதுவிட்டேன்… மாமன்னன் 50 ஆவது நாளில் வடிவேலு நெகிழ்ச்சி!
, வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (07:49 IST)
மாமன்னன் திரைப்படம் ஐம்பதாவது நாளைக் கடந்த நிலையில் படத்தின் வெற்றிவிழாவை படக்குழுவினர் கொண்டாடினர். நிகழ்ச்சியில் மாமன்னன் திரைப்படத்தின் திரைக்கதை புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு “நான் எத்தனையோ படங்களில் நடித்துள்ளேன். ஆனால் இந்த ஒத்த படம் எனக்கு பெருமையை சம்பாதித்து கொடுத்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் கதை சொல்லும்போதே நான் நெகிழ்ந்து போனேன்.

படத்தில் ஒரு ஐந்தாறு காட்சிகளில் நடிக்கும் போது நான் உண்மையாகவே அழுதுவிட்டேன். அந்த மலை உச்சியில் நான் அழுத காட்சியை பார்க்கும் போது வேறு யாரோ நடித்திருந்தது போல பார்த்து நான் கண்கலங்கினேன்” எனப் பேசியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாமன்னன் படத்துல அந்த ஒரு காட்சி… வடிவேலுவின் நடிப்பை புகழ்ந்த ஏ ஆர் ரஹ்மான்!