Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேலுவின் உதவியாளர் கொலை மிரட்டல்! – தயாரிப்பாளர் புகார்!

Webdunia
புதன், 8 ஜனவரி 2020 (09:26 IST)
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் உதவியாளர் கொலை மிரட்டல் விடுத்ததாக தயாரிப்பாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர் வடிவேலு. அதிக படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தவர் இம்சை அரசன் 23ம் புலிகேசி, எலி போன்ற படங்களின் மூலம் நகைச்சுவை நாயகனாகவும் நடித்துள்ளார். ஆனால் தற்போது பல்வேறு பிரச்சினைகளால் படங்களில் நடிக்காமல் இருக்கிறார்.

இந்நிலையில் வடிவேலுவை வைத்து ‘எலி’ படத்தை தயாரித்த மதுரையை சேர்ந்த தயாரிப்பாளர் சதீஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். வடிவேலுவை வைத்து சதீஷ் தயாரித்த எலி படத்தில் 9 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இவருக்கும், வடிவேலு தரப்புக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் சதீஷ்குமாரின் வீட்டுக்குள் புகுந்த வடிவேலுவின் உதவியாளர் மணிகண்டன் என்பவர்  ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் கோவிந்தராஜ் என்பவரையும் தாக்கியுள்ளார். இதனால் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்த வழக்கு… நீதிமன்றத்தில் ஆஜரான பா ரஞ்சித்!

பிரபாஸின் ராஜாசாப் படத்தில் முதியவராக சஞ்சய் தத்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

நண்பன் ரத்னகுமாருக்காக தயாரிப்பாளர் ஆகும் லோகேஷ் கனகராஜ்!

கூலி படத்தில் பிஸி… கிங்டம் படத்தின் பின்னணி இசையை ‘அவுட்சோர்ஸ்’ செய்யும் அனிருத்!

பீரியட் படமாக உருவாகிறதா தனுஷ் & விக்னேஷ் ராஜா இணையும் படம்?

அடுத்த கட்டுரையில்
Show comments